ட்விட்டரில் சாய் பல்லவியை பின்தொடரும் 10 லட்சம் பேர்
பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவியை ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
சென்னை: பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவியை ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
தனது இயலான நடிப்பால் மலர் டீச்சராக பிரேமம் படம் மூலம், மலையாளம் மட்டும் அல்லாமல் எல்லா மொழி மக்களையும் ஈர்த்தவர் சாய் பல்லவி.

பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் பிசியாக இருக்கிறார் சாய் பல்லவி. இவர் தெலுங்கில் நடித்த தனது முதல் படமான ஃபிதாவிலும் தனது நடிப்பால் மக்களை தன் வசம் ஈர்த்தார். அது மட்டும் அல்ல அது அந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கரு படத்திலும் ஸ்கோர் பண்ணினார் சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இயல்பான அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தண்டியுள்ளதாம்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி தன் மேல் அன்பு வைத்து தன்னை இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கொண்டு வந்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











