Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மலர் டீச்சர் இனி ‘டாக்டர்’!
சென்னை: பிரேமம் பட புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளார்.
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழில் முன்னணி நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்க, தமிழகத்தில் இருந்து போய் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் இவர்.
பிரேமம் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்க பறந்தார் சாய் பல்லவி.
மணிரத்னம் படம்..
தனது படிப்பிற்கு இடையே மலையாளத்தில் களி படத்தில் நடித்தார் சாய் பல்லவி. பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.
கதையில் மாறுதல்...
ஆனால், கதையில் ஏற்பட்ட சில மாறுதல்களால் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உரிய விளக்கமும் அவர் அளித்திருந்தார்.
|
மருத்துவரானார்...
இந்நிலையில், தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகி இருக்கிறார் சாய்பல்லவி. இத்தகவலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
|
விரைவில் தமிழ்...
இதனால், மலர் டீச்சர் இல்லையில்லை, டாக்டர் சாய்பல்லவி இனி படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார், விரைவில் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.