Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!
கொச்சி: கொச்சி டைம்ஸின் 2016ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக சாய் பல்லவி தேர்வாகியுள்ளார்.
கொச்சி டைம்ஸ் 2016ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர், நடிககை குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்றுள்ள நடிகை சாய் பல்லவி, நடிகர் டொவினோ தாமஸ்.
பிரேமம் என்ற ஒரே படம் மூலம் பிரபலம் ஆனவர் சாய் பல்லவி.
சாய் பல்லவி
முகம் நிறைய மேக்கப், ஒரு பரு வந்தால் டென்ஷனாகி அதை மறைக்க படாதபாடு படுவது, தலைமுடியை ஸ்டெர்ய்டனிங் செய்வது என்று இருப்போருக்கு மத்தியில் மேக்கப்பில்லாமல் பருவோடு, சுருட்டை முடியோடு இயற்கையாக வரும் சாய் பல்லவியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
மகிழ்ச்சி
மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. நான் மலையாளத்தில் வெறும் இரண்டு படங்களே நடித்துள்ளேன். இருப்பினும் என்னை தேர்வு செய்த ரசிகர்கள் மிகவும் இனிமையானவர்கள் என்கிறார் சாய் பல்லவி.
பிரேமம்
பிரேமம் படத்தில் நான் நடித்தேன். ஆனால் அதுவரை எனக்கு நடிக்கத் தெரியுமா என்று கூட தெரியாது. என்னால் நடிக்க முடியும் என தற்போதும் என்னால் நம்ப முடியவில்லை என சாய் பல்லவி கூறியுள்ளார்.
யோகா
நான் சுத்த சைவம். உடல் எடை அதிகரிக்கும் போது எல்லாம் யோகா செய்வேன். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் தியானம் செய்வேன். கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு ஒரு காய்ச்சல் கூட வரவில்லை. இது தியானத்தால் தான் சாத்தியம் என்பேன் என பல்லவி தெரிவித்துள்ளார்.