twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவதூறு வழக்கு: அஞ்சலி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

    By Shankar
    |

    சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகி நகலை பெற வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

    Anjali

    இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். அதற்குகளஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    English summary
    The Magistrate of Saidapet 17th Court has ordered actress Anjali to appear in person in director Kalangiam's defamation case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X