Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படத்துல 7 ஃபைட்... சீரியசாக சிலம்பம் கற்கும் சாக்ஷி
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால், ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றை ஜி.ஜே.சத்யா சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இதுபற்றி சாக்ஷி கூறும்போது, இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுவருகிறேன் என்றார்.
தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்
இயக்குனர் சத்யா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படுத்தினார். அதைப் பார்த்தே, இந்த படத்துக்கு அவரை தேர்வு செய்தேன். நாயகியின் கேரக்டருக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு திறமையை மெருகேற்றி வருகிறார். இந்த அர்ப்பணிப்பு அவரை மேலும் உயர்த்தும். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை பரிசீலனை செய்து வருகிறோம். சில நாட்களில் வெளியிடுவோம் என்றார்.