Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படத்துல 7 ஃபைட்... சீரியசாக சிலம்பம் கற்கும் சாக்ஷி
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால், ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றை ஜி.ஜே.சத்யா சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இதுபற்றி சாக்ஷி கூறும்போது, இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுவருகிறேன் என்றார்.
தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்
இயக்குனர் சத்யா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படுத்தினார். அதைப் பார்த்தே, இந்த படத்துக்கு அவரை தேர்வு செய்தேன். நாயகியின் கேரக்டருக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு திறமையை மெருகேற்றி வருகிறார். இந்த அர்ப்பணிப்பு அவரை மேலும் உயர்த்தும். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை பரிசீலனை செய்து வருகிறோம். சில நாட்களில் வெளியிடுவோம் என்றார்.