Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
படத்துல 7 ஃபைட்... சீரியசாக சிலம்பம் கற்கும் சாக்ஷி
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால், ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றை ஜி.ஜே.சத்யா சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இதுபற்றி சாக்ஷி கூறும்போது, இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுவருகிறேன் என்றார்.
தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்
இயக்குனர் சத்யா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படுத்தினார். அதைப் பார்த்தே, இந்த படத்துக்கு அவரை தேர்வு செய்தேன். நாயகியின் கேரக்டருக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு திறமையை மெருகேற்றி வருகிறார். இந்த அர்ப்பணிப்பு அவரை மேலும் உயர்த்தும். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை பரிசீலனை செய்து வருகிறோம். சில நாட்களில் வெளியிடுவோம் என்றார்.