Don't Miss!
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
படத்துல 7 ஃபைட்... சீரியசாக சிலம்பம் கற்கும் சாக்ஷி
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால், ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றை ஜி.ஜே.சத்யா சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இதுபற்றி சாக்ஷி கூறும்போது, இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுவருகிறேன் என்றார்.
தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்
இயக்குனர் சத்யா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படுத்தினார். அதைப் பார்த்தே, இந்த படத்துக்கு அவரை தேர்வு செய்தேன். நாயகியின் கேரக்டருக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு திறமையை மெருகேற்றி வருகிறார். இந்த அர்ப்பணிப்பு அவரை மேலும் உயர்த்தும். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை பரிசீலனை செய்து வருகிறோம். சில நாட்களில் வெளியிடுவோம் என்றார்.