தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கூறிய குஷ்பு மீது சேலத்தில் வழக்கு-நவம்பரில் விசாரணை

சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிவழகன் தாக்கல் செய்துள்ள வழக்கில்,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 13-ந் தேதி அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்த வெற்றி குறித்து நடிகை குஷ்பு பத்திரிகையில் அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி இல்லை என்றும், மக்களுக்கு தான் தோல்வி என்றும் இதனால் தமிழக மக்கள் 5 ஆண்டுகள் கஷ்டப்படப்போகிறார்கள் என்றும் கூறி உள்ளார்.
இதை படித்த நான், மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இந்த வாசகம் என்னை மிகவும் புண்படுத்தி விட்டது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டளித்த மக்களை அவர் இழிவு படுத்தி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேற்று இந்த மனு மாஜிஸ்திரேட் ஸ்ரீவள்ளி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால் வக்கீல்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி
வைத்தார்.


Click it and Unblock the Notifications











