Don't Miss!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மீண்டும் தோல் அலர்ஜி... சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் சமந்தா!
சென்னை: மீண்டும் தோல் அலர்ஜி காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்கிறார் நடிகை சமந்தா.
இந்த வாரம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா.
சில தினங்கள் ஓய்வு என அறிவித்ததிலிருந்து, அவரைப் பற்றி எதிர்மறைச் செய்திகள் ஏராளம் பரவி வருகின்றன.
இப்போது அவர் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதற்கான புதிய காரணத்தை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, சமந்தா தோல் அலர்ஜிக்காக சிகிச்சைப் பெறச் செல்வதால்தான் இந்த ஓய்வை அறிவித்திருக்கிறாராம்.
மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கரின் ஐ படங்களில் நடிக்கும் வாய்ப்பை சமந்தா இழந்தது நினைவிருக்கலாம். காரணம் இந்த தோல் ஒவ்வாமைதான்.
அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்ற பிறகு 6 மாதங்கள் சினிமா லைட் படாமல் ஓய்விலிருந்த பிறகுதான் அவருக்கு குணமானது. அதன் பிறகு அவர் நடித்த படம் அஞ்சான்.
தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வந்தார்.
இப்போது மீண்டும் அவருக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் அதிக வெப்பத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தததால், விளக்கு வெளிச்சத்தைக் குறைத்து படப்பிடிப்பை நடத்தினர்.
இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தை முடித்துக் கொடுத்ததும் மீண்டும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லப் போகிறாராம் சமந்தா. சில தினங்கள் சிகிச்சைப் பெற்ற பிறகு திரும்புகிறாராம். இந்தப் பயணத்துக்காகத்தான் புதுப் படங்களை ஒப்புக் கொள்வதைத் தவிர்த்து வந்தாராம். அக்டோபருக்குப் பிறகுதான் புதுப் படங்களுக்கு கால்ஷீட் தந்திருக்கிறாராம்.