Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹூட் ஹூட் புயலுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்த சமந்தா
ஹைதராபாத்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகை நடிகை சமந்தா ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.
ஆந்திர மாநிலத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. விசாகப்பட்டினம் பெருமளவில் சேதமடைந்தது. இதில் 50 பேர் பலியானார்கள், பலஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்தனர். பல கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.
ஹூட் ஹூட் புயலுக்காக நடிகர் சூர்யா, கார்த்திக், விஷால் உட்பட பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர். இதற்கு நடிகை சமந்தாவும் ரூ. 10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை ஹைதராபாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சமந்தா சந்தித்தார். அப்போது ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.