Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'தோல் நோயெல்லாம் இல்லை... தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி!' - சமந்தா விளக்கம்
சென்னை: எனக்கு தோல் நோய் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் உடம்பு சூடாகிவிட்டது, என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சரும வியாதி வந்ததால், சூர்யா படப்பிடிப்பு ரத்தானதாக செய்திகள் பரவின.
ஆனால் படப்பிடிப்பு ரத்தாகவில்லை என்றும், எங்கள் பட ஹீரோயின் சமந்தாதான் என்றும் இயக்குநர் லிங்குசாமி நேற்று அறிவித்தார்.
இப்போது தன் பங்குக்கு சமந்தாவும் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என்னைப் பற்றி பரவிய செய்திகளில் உண்மை இல்லை. லிங்குசாமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதும் தவறு. கடுமையான உடல் நலக்குறைவு எனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி உள்ளது.
நான் தற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ஒரே நேரத்தில் இந்த படங்களில் தொடர்ந்து நடிப்பதால் உடல் சூடாகிவிட்டது. இதனால் சோர்வடைந்துவிட்டேன். வேறொன்றுமில்லை.
இயக்குநர் லிங்குசாமியிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது நலமாக இருக்கிறேன். வரும் 7-ந்தேதி முதல் மும்பையில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.