Just In
- 5 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 42 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 52 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
Don't Miss!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மக்கள் மனம் கவர்ந்த சமந்தா.. 2019ம் ஆண்டில் ரொம்ப விரும்பப்பட்டவராக தேர்வு
ஹைதரபாத்: 2019ம் ஆண்டில், மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 40 க்கும் கீழ் குறைவான வயதுடைய பெண் பிரபலங்களை மையபடுத்தி ஆன்லைன் ஓட்டெடுப்பு நடத்தியது.
அதில் முதல் இடத்தை சமந்தா தட்டி சென்றார். Most desirable Women 2019 என்ற பட்டம் நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனித்திறமை
இந்த ஓட்டெடுப்பின் முக்கிய அம்சமாக செக்ஸ் அப்பீல், தனி திறமை, ஆளுமை, தன்னம்பிக்கை இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த பெண்ணை தேர்வு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த ஓட்டெடுப்பில் நடிகை சமந்தா முதல் இடத்தை பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திருமணத்துக்கு பின்னர் சினிமா நடிகைகளை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற மாய பிம்பத்தை உடைத்தெறிந்து உள்ளார் நடிகை சமந்தா.

திருமணம் தடை இல்லை
சமூக வாழ்வில் சமந்தா ஒரு சுதந்திரமான பெண்ணாகவும், அதீத தன்னம்பிக்கை கொண்டவராகவும் உள்ளதால் மட்டுமே, திருமணதிற்கு பிறகும் அவரது படத்திற்கு நல்ல வரவேற்ப்பு இவருக்கு இருக்கிறது. நட்சத்திர தம்பதிகளான நாகர்ஜுனா, அமலாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்துக்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தத்தோடு அவர் நடித்த 6 படங்களும் தொடர் ஹிட் அடித்தன. அவர் திருமணத்துக்கு பிறகு விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.

நம்பிக்கையின் நாயகி
மேலும் அந்த பத்திரிக்கைக்கு சமந்தா கொடுத்துள்ள பேட்டியில், கல்யாணம் தனது career க்கு தடையாக இல்லை என்பதாகவும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு தான் தனது வெற்றிக்கு காரணம் என்றும் கூறியிருந்தார். அழகு என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை என்றும், நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது நமக்குள் ஏற்படும் positive vibration பிறரை கவர்ந்துவிடும். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். நான் முதல் முறையாக Bold டான costumeவுடன் வெளிவந்தவுடன் என்னை அனைவரும் கேலி செய்தனர் அதையே நான் தொடர்ந்து இரண்டாவது முறையாக செய்தபோது கேலியும் கிண்டலும் குறைந்துவிட்டன. நமக்கான பாதையை நாம் தீர்மானிக்க வேண்டுமே தவிர பிறர் அல்ல என்றும் கூறினார்.

பெண்களுக்கு ரோல் மாடல்
ஆண் ரசிகர்களைவிட, பெண் ரசிகைகள் அதிகம் கொண்டவர் சமந்தா என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் சொல்லபடுவது உண்டு. நெட்டிசன்களால் வாக்களித்து இந்த பட்டத்தை வென்றுள்ள சமந்தா, அவர் ஒரு நடிகையாக மட்டும் பார்க்க படவில்லை , பிற பெண்களுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார் என்பது தெளிவாகிறது .அவரது பேட்டியில் சினிமாவை தாண்டி சமூகத்தில் தனக்கிருக்கும் பொறுப்பையும் அவர் தெரிவித்திருப்பதாக அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை ரீட்வீட் செய்து வருகிறார்கள்.