கடந்த வாரம் ஓடிப் போயிட்டோம், போட்டோ எப்படி கசிந்தது?: சமந்தா
Recommended Video

சென்னை: திருமணமானாலும் சமந்தாவுக்கு குசும்பு போகவில்லை.
திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் பாதிப்பில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. சொல்லப் போனால் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

அவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்திற்காகக அவர் சிலம்பம் எல்லாம் கற்றுள்ளார்.
இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகரோ சமந்தாவும், வேறு ஒரு ஆணும் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது என்ன என்று கேட்டார்?
அந்த புகைப்படத்தை பார்த்த சமந்தா கூறியிருப்பதாவது,
கடந்த வாரம் ஓடிப் போய்விட்டோம்... இது எப்படி லீக்கானது என்று தெரியவில்லை. கண்டதும் காதல் என்று குசும்பாக பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











