டாக்டர்கிட்ட போய் கேளுங்க... டீச்சர்கிட்ட போய் கேளுங்க... எதுக்கு சொல்கிறார் சமந்தா?
திருமணமாகப்போகும் பெண் போலவே இல்லை சமந்தா. நேற்று கூட ஒரு செம ஹாட் ஃபோட்டோ ரிலீஸ் ஆனது. ஏதோ ஒரு ஃபேஷன் இதழுக்கான ஃபோட்டோஷூட்டாம்.
சமந்தாவிடம் பேட்டி கேட்கும் நிருபர்கள் சமீபகாலமாக மிஸ் பண்ணாத ஒரு கேள்வி திருமணத்துக்கு பின் நடிப்பீர்களா?

இந்தக் கேள்வியை தொடங்கினாலே சமந்தாவின் முகம் சிவந்து விடுகிறதாம். இந்த கேள்வியை ஒரு டாக்டர்கிட்ட, டீச்சர்கிட்ட, இஞ்சினியர்கிட்ட கேக்க முடியுமா? நடிகைகள் என்றால் திருமணத்துக்கு பிறகு வீட்டிலேயே முடங்கி விடணுமா? என்று ஆவேசப்படுகிறார்.
இந்த பதில் நமக்கா இல்லை வருங்கால மாமனார் நாகார்ஜுனாவுக்கா? என்பது புரியாமல் விழிக்கின்றனர் கேள்வி கேட்டவர்கள்.
Comments


Click it and Unblock the Notifications