Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நான் சொன்னேனா... சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று சொன்னேனா..?'- சீறும் சமந்தா
சென்னை: சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொன்னேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள் என்கிறார் நடிகை சமந்தா.
தமிழில் சமந்தா நடித்த தெறி, 24 ஆகிய தமிழ்ப் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே அவருக்கு வெற்றிப் படங்கள்தான். இதன் மூலம் சமந்தா நடித்தால் ஓடாது என்ற பழியிலிருந்து வெளிவந்துவிட்டார்.
ட்விட்டர்...
அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார்.
அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் கடைசிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பராக, கேர்ள்ஃபிரண்டாக இல்லை. இதைச் சரிகட்ட, இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை," என்று கூறியுள்ளார்.
விலகலா?
இதனால் சினிமாவிலிருந்து சமந்தா விலக எண்ணுகிறாரா, அதெப்பட்டி ஒரு முன்னணி நடிகை புதுப்படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று கூறமுடியும் என்கிற கேள்விகள் எழுந்தன.
விளக்கம்
இதுகுறித்து இப்போது மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. அதில், "நிச்சயமாக சினிமாவிலிருந்து நான் விலகவில்லை. கடந்த எட்டு மாதங்களாக ஓய்வில்லாமல் நடித்து வருவதால் தற்போதைக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதாக உள்ளேன்.
மீடியா
அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள்.
வட சென்னை
ஜனதா கராஜ் படத்தில் தற்போது நடித்து வருகிறேன். அடுத்ததாக வட சென்னையில் நடிக்கப் போகிறேன். பொதுவாக நான் ஒரேசமயத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருப்பேன். அதற்குப் பதிலாக குறைந்த படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
அக்டோபருக்குப் பிறகுதான்
எனவே புதிய படங்களில் நடிப்பதற்கு முன்பு நடித்துவரும் படங்களை முடிக்க எண்ணுகிறேன். அக்டோபரிலிருந்துதான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பிப்பேன்," என்று கூறியுள்ளார்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!