தேதி இல்ல... சிவகார்த்திக்கு நோ சொன்ன சமந்தா!
அடுத்த ஆண்டு வரை தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருப்பதால், சிவகார்த்திகேயன் படத்துக்கு தேதி தர முடியவில்லை என நடிகை சமந்தா கூறிவிட்டாராம்.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது.
ஆனால் இப்போது இப்படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து விசாரிக்கையில், இப்போது சமந்தாவிடம் 4 படங்களில் நடித்து வருகிறாராம். அவற்றில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ள 10 என்றதுக்குள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே போல் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்துவரும் படத்தில் முதல் ஷெட்யூல் முடிந்திருக்கிறது.
அடுத்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகவும், அட்லீ இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும் நடிக்கவிருக்கிறார்.
எனவே அடுத்த ஆண்டு இறுதி வரை சமந்தா பிஸியாக இருப்பதால், தேதி தர இயலவில்லை என்று கூறிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











