நாகசைதன்யாவை மறக்காத சமந்தா.. விவாகரத்துக்கு பின் வெளியிட்ட பதிவு.. என்ன காரணமா இருக்கும்!
சென்னை : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

பெயரை மாற்றினார்
நடிகை சமந்தா ரூத் பிரபு திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை தன் பெயருடன் சேர்த்து சமந்தா அக்கினேனி என்று அழைக்கப்பட்டு வந்தார். திடீரென நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 'S' என்று மாற்றினார். இதையடுத்தே இவர்களின் விவாகரத்து விவகாரம் இணையத்தில் மெல்ல கசியத் தொடங்கியது.

இருவரும் பிரிந்தனர்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல திரையுலக பிரபலங்கள் இருவருக்கிடையே பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. இவர்களின் விவாகரத்தால் இணையத்தில் பல வதந்திகள் பரவின.

Unfollow
நாக சைதன்யாவும் சமந்தாவும் வாழ்ந்து வந்த ஹைதராபாத் கச்சி பவுலி மாளிகையிலிருந்து நாகசைதான்யா வெளியேறி தந்தை நாகார்ஜூனாவுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்துவிட வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் திருமண புடவையை நாகசைதன்யாவின் குடும்பத்திடம் திருப்பி கொடுத்துவிட்டார்ஃ மேலும், நாகசைதன்யாவை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்தார் சமந்தா.

மறக்காத சமந்தா
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நாகசைதன்யா நடித்த மஜிலி திரைப்படம் வெளியாகி 3 வருடமாகும் நிலையில், அந்த புகைப்படத்தை பதிவிட்டு #3yearsformajili என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்துள்ளார். விவாகரத்துப் பின் சமந்தா முதன்முறையாக நாகசைதன்யாவின் புகைப்படத்தை பதிவிட்டதைப்பார்த்த ரசிகர்கள் சமந்தா இன்னும் நாகசைதன்யாவை மறக்கவில்லை என்பது இந்த பதிவு உறுதிப்படுத்தி உள்ளதாக கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











