ஆம் ஆத்மிக்கு தைரியமாக வாழ்த்து சொன்ன சமந்தா
சென்னை: மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். டெல்லியில் இருந்தே அதனை தொடங்கியுள்ளனர் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா.
சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கருத்து தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு இனிய தொடக்கம் என்று கூறியுள்ளார்.

மாற்றம் ஆரம்பம்
அதோடு மட்டுமல்லாது மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். டெல்லியில் இருந்து இந்த மாற்றம் ஆரம்பமாகியுள்ளது என்று தேர்தல் முடிவு பற்றி கூறியிருக்கிறார்.

பாராட்டிய சித்தார்த்
இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறார். சமந்தாவின் தில்லான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் பேச்சு
பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஹீரோக்களிடம் அரசியல் பற்றியும், அரசியல் தலைவர்கள் பற்றியும் கருத்து கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

சமந்தாவின் தைரியம்
ஹீரோக்களே இப்படியென்றால் ஹீரோயின்கள் வாயே திறக்க மாட்டார்கள். ஆனால் நடிகை சமந்தா வெளிப்படையாக, தைரியமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதே சமயம் சமந்தாவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் கலக்கம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











