Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆம் ஆத்மிக்கு தைரியமாக வாழ்த்து சொன்ன சமந்தா
சென்னை: மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். டெல்லியில் இருந்தே அதனை தொடங்கியுள்ளனர் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா.
சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கருத்து தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு இனிய தொடக்கம் என்று கூறியுள்ளார்.
மாற்றம் ஆரம்பம்
அதோடு மட்டுமல்லாது மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். டெல்லியில் இருந்து இந்த மாற்றம் ஆரம்பமாகியுள்ளது என்று தேர்தல் முடிவு பற்றி கூறியிருக்கிறார்.
பாராட்டிய சித்தார்த்
இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறார். சமந்தாவின் தில்லான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் பேச்சு
பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஹீரோக்களிடம் அரசியல் பற்றியும், அரசியல் தலைவர்கள் பற்றியும் கருத்து கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
சமந்தாவின் தைரியம்
ஹீரோக்களே இப்படியென்றால் ஹீரோயின்கள் வாயே திறக்க மாட்டார்கள். ஆனால் நடிகை சமந்தா வெளிப்படையாக, தைரியமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதே சமயம் சமந்தாவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் கலக்கம் அடைந்துள்ளனர்.