Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கத்தி கற்றுத்தந்த பாடம்... பிகினுக்கு பை சொன்ன சமந்தா!
ரசிகர்களைக் கவர பிகினி தேவையில்லை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும் என்று நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம்.
சுடிதார், சல்வார், புடவை என ஹோம்லி லுக்கில் நடித்து வந்தவர் சமந்தா. இதுதான் அவருக்கு எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. எனவே இனி டீசன்ட் உடைகளை அணிந்து மட்டுமே திரைப்படங்களில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார் சமந்தா.
சமர்த்து சமந்தா
தான் நடித்த அனைத்து படங்களிலுமே சமர்த்து பொண்ணாக நடித்த சமந்தா, அஞ்சான் படத்தில் கவர்ச்சியின் எல்லையைத் தாண்டினார்.
பிகினி போட்டும் ஓடலையே
பிகினி வரை சென்றும் அஞ்சான் படம் 5 நாள் கூட சரியாக ஓடவில்லை. மாறாக ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனமே கிடைத்தது சமந்தாவுக்கு.
கத்தி ஹிட்
தீபாவளிக்கு வெளியான கத்தி திரைப்படத்தில் தனது பழைய பாணி உடைகளையே அணிந்து நடித்தார் சமந்தா. படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. சமந்தாவிற்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
கவர்ச்சிக்குத் தடை
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள சமந்தா. இனி பிகினி, கவர்ச்சி உடைகளை கண்ணால் கூட பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
கதைக்கு முக்கியத்துவம்
சதைக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.