Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்த சமந்தா: காரணம் யார் தெரியுமா?
Recommended Video
சென்னை: தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் பிகினி அணிந்தால் என்னம்மா, கல்யாணமான பொண்ணு பிகினி போடலாமா என்று கேட்டு நெட்டிசன்கள் விளாசுகிறார்கள்.
குட்டியான கவுன் அணிந்தாலும் திருமணமான பிறகும் இப்படியா கவர்ச்சியாக உடை அணிவது என்று கிண்டல் செய்வதுடன், கேவலமாக பேசுகிறார்கள். இந்நிலையில் இது குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,
வருத்தம்
முன்பெல்லாம் யாராவது என்னை கலாய்த்தால் வருத்தப்படுவேன். நம்மிடம் தான் ஏதோ பிரச்சனையா என்று யோசிக்கும் அளவுக்கு கவலைப்படுவேன். காலையில் எழுந்த உடன் யாராவது கலாய்த்துள்ளார்களா என்று சமூக வலைதளங்களில் பார்ப்பேன். அதனால் மனதளவில் காயப்பட்டேன். தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்தேன். அந்த சூழலில் இருந்து எப்படி வெளியே வருவது என்று யாருக்கும் அறிவுரை வழங்கும் அளவுக்கு நான் இல்லை.
சிரிப்பு
காலப் போக்கில் நான் மாறிவிட்டேன். அதன் பிறகு யார் கலாய்த்தாலும் நான் கண்டுகொள்வது இல்லை. தற்போது எல்லாம் யாராவது என்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது. அதை பார்த்து கோபம் வருவது இல்லை. யார் கலாய்த்தாலும் நான் கண்டுகொள்வது இல்லை.
புகைப்படம்
நான் ஒரு ட்வீட் போட்டாலோ இல்லை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டாலோ நிச்சயம் கலாய்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும். கலாய்ப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும். என்ன நடக்கும் என்று தெரிந்தே தான் ட்வீட் செய்கிறேன், புகைப்படங்களை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
சமந்தா
சமந்தா சொல்வது மிகச் சரி. அவர் புகைப்படங்கள் வெளியிட்டாலே அதை கலாய்ப்பதற்கு என்றே பலர் இருக்கிறார்கள். முகம் தெரியாத நெட்டிசன்களுக்காக பயந்து என்னால் வாழ முடியாது. அவர்களுக்காக உடை அணிய முடியாது என்கிறார் சமந்தா. சமந்தா மட்டும் அல்ல பல நடிககைள் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.