Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓப்ரா வின்ப்ரேக்கு புடவையை பரிசாகத் தந்த நடிகை சமீரா!

வின்ப்ரேயின் தீவிர ரசிகைகளுள் ஒருவர் சமீரா. அவர் இந்தியாவுக்கு வந்ததையொட்டி, பரமேஷ்வர் கோத்ரெஜ் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற சமீரா, அங்கு தனது மனம் கவர்ந்த நாயகியான ஓப்ராவுடன் பேசி மகிழ்ந்தார்.
ஓப்ராவை சந்தித்தது குறித்து பின்னர் சமீரா கூறுகையில், "சென்னையில் வேட்டை படத்தின் புரமோஷன் பணிகளை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஓப்ரா வின்ப்ரே வருவதை அறிந்ததும், என நிகழ்ச்சிகளைக் கூட ஒத்தி வைத்துவிட்டேன்.
அவரைச் சந்தித்தபோது, என்னிடம் மிக இயல்பாக எளிமையாகப் பழகினார். நான் கட்டியிருந்த புடவை அவருக்குப் பிடித்துவிட்டது. எத்தனை அழகான உடை இது என அடிக்கடி சொல்லி, தொட்டுப்பார்த்து மகிழ்ந்தார். அவருக்கும் அதேபோன்ற புடவையை தர விரும்பினேன். ஆரம்பத்தில் அவர் மறுத்தார். ஆனால் அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டேன்.
நான் கட்டியிருந்தது சாந்தனு - நிகில் வடிவமைத்த டிசைனர் புடவை. அதே போல மேலும் ஒன்றை டிசைன் செய்யுமாறு கூறிவிட்டேன். அதை அவருக்கு அனுப்பவும் சொல்லிவிட்டேன்.
நான் ரொம்ப அழகாக இருப்பதாக ஓப்ரா சொன்னபோது, என் வாழ்க்கையின் பயனை அடைந்ததுபோல பரவசப்பட்டேன்," என்றார்.