Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல்ல போன் நம்பர்தான் கேட்டேன், அப்புறம்தான்... காதலில் விழுந்த கதையை சொன்ன ஹீரோயின்
Recommended Video
மும்பை: தான் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்ட கதையை, பிரபல முன்னாள் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மும்பையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
திருமண நாள்
இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருக்கும் சமீரா, அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அவருக்கு ஆறாவது திருமண நாள்.
6 வருடம் ஓடிவிட்டது
திருமண நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் நேற்று நடந்தது போல்தான் இருக்கிறது. அதற்குள் ஆறுவருடம் ஓடிவிட்டது என்று தெரிவித்திருந்தார். அதோடு, திருமணத்தின் போது பயங்கரச் சிரிப்புடன் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதை ஏராளமானோர் லைக் செய்திருந்தனர்.
எப்படி காதலில்
அதில் ஒரு ரசிகர், எப்படி இருவரும் காதலில் விழுந்தீர்கள் என்ற கதையை சொல்ல முடியுமா? என்று கேட்டிருந்தார். இதையடுத்து சத்தம் போடாமல் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்ட சமீரா, அதில் காதலில் விழுந்த கதையை, கொஞ்சம் வெட்கத்துடனேயே தெரிவித்துள்ளார்.
போன் நம்பர் கேட்டேன்
அது 2010 ஆம் ஆண்டு. அக்ஷயின் வர்தேஞ்சி பைக்கில் வைத்து ஷூட்டிங். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். ஷூட்டிங் முடிந்தபின் அவரிடம் போன் நம்பர் கேட்டேன். அவ்வளவுதான். இப்போது இங்கே இருக்கிறோம் என்று தனது காதல் திருமணம் வரை கதையை ஒரே வரியில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துகள்
இதற்கு ரசிகர்கள், இது அழகான காதல் என்று கமென்ட் அடித்து வருகின்றனர். ஆறாவது திருமண நாளை முன்னிட்டு நடிகை சமீராவுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.