twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இடம் மாறும் சமிக்ஷா! அறிந்தும் அறியாமலும், தொடர்ந்து மெர்க்குரிப் பூக்கள் ஆகியவற்றில் கவர்ச்சிதிருவிளையாடல் நடத்திய ஜகஜக சமிக்ஷா, தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாததால்கன்னடத்திற்கு இடம் மாறுகிறார்.அறிந்தும் அறியாமலும் வந்தபோது அதிகம் பேசப்பட்டவர்கள் ஆர்யா, கூட நடித்தநவ்தீப மற்றும் சமிக்ஷா.புத்தம் புது மலரான சமிக்ஷாவின் திண திண கிளாமரை பார்த்து ரசிகர்கள் திக்கித்திணறித்தான் போனார்கள். முதல் படத்தில் முத்திரை பதித்த சமிக்ஷா, மெர்க்குரிப்பூக்களில் கிளாமர் கடலில் முழுக்க மூழ்கி ரசிகர்களை திணறடித்தார்.கவர்ச்சி கரைபுரண்டோட நடித்தும் கூட சமிக்ஷாவுக்கு நிறையப் படங்கள் வந்துவிடவில்லை. அம்மணி கையில் இப்போது இருப்பது மனதோடு மழைக்காலம்மட்டுமே.கையில் படம் இல்லாவிட்டாலும் கூட சமிக்ஷாவைப் பத்தி சலபுலவென்று ஏகப்பட்டசெய்திகள் வரத் தவறுவதில்லை.அவரும் ஆர்யாவும் கிடுக்கிப் புடி நட்பில் இருப்பதாகவும், படு நெருக்கமானஅவர்களது நட்பு குறித்தும் எக்குத்தப்பாக செய்திகள் வந்து கொண்டுதான்இருக்கின்றன.நியூஸ்தான் இப்படி வருகிறதே தவிர ஆர்யா இப்போதெல்லாம் சமிக்ஷாவை கண்டுகொள்வதே இல்லையாம். அவரது கவனம் சமிக்ஷாவிடமிருந்து விலகி விட்டது.அய்யாவோட கவனம் இப்போது பதபத பத்மப்பிரியா மீது தான் என்கிறார்கள்கோடம்பாக்கம் குருவிகள். இந்த சோகத்தில் இருக்கும் சமிக்ஷாவை சந்தோஷப்படுத்தும் வகையில் வந்ததுகன்னட பட வாய்ப்பு.சிம்பு கம்பாக நடித்திருந்த மன்மதன் இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில்தமிழில் ஜோதிகா செய்திருந்த கேரக்டரை செய்ய சமிக்ஷாவை கூப்பிட்டுஅனுப்பியிருக்கிறார்கள். அவரும் ஒத்துக் கொண்டு விட்டாராம். விரைவில் ஷூட்டிங்தொடங்கவுள்ளதாம்.கன்னடம் தவிர மலையாளம், தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளார் சமிக்ஷா.இக்கரைக்கு அக்கரை பச்சை..

    By Staff
    |

    அறிந்தும் அறியாமலும், தொடர்ந்து மெர்க்குரிப் பூக்கள் ஆகியவற்றில் கவர்ச்சிதிருவிளையாடல் நடத்திய ஜகஜக சமிக்ஷா, தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாததால்கன்னடத்திற்கு இடம் மாறுகிறார்.

    அறிந்தும் அறியாமலும் வந்தபோது அதிகம் பேசப்பட்டவர்கள் ஆர்யா, கூட நடித்தநவ்தீப மற்றும் சமிக்ஷா.

    புத்தம் புது மலரான சமிக்ஷாவின் திண திண கிளாமரை பார்த்து ரசிகர்கள் திக்கித்திணறித்தான் போனார்கள். முதல் படத்தில் முத்திரை பதித்த சமிக்ஷா, மெர்க்குரிப்பூக்களில் கிளாமர் கடலில் முழுக்க மூழ்கி ரசிகர்களை திணறடித்தார்.


    கவர்ச்சி கரைபுரண்டோட நடித்தும் கூட சமிக்ஷாவுக்கு நிறையப் படங்கள் வந்துவிடவில்லை. அம்மணி கையில் இப்போது இருப்பது மனதோடு மழைக்காலம்மட்டுமே.

    கையில் படம் இல்லாவிட்டாலும் கூட சமிக்ஷாவைப் பத்தி சலபுலவென்று ஏகப்பட்டசெய்திகள் வரத் தவறுவதில்லை.

    அவரும் ஆர்யாவும் கிடுக்கிப் புடி நட்பில் இருப்பதாகவும், படு நெருக்கமானஅவர்களது நட்பு குறித்தும் எக்குத்தப்பாக செய்திகள் வந்து கொண்டுதான்இருக்கின்றன.


    நியூஸ்தான் இப்படி வருகிறதே தவிர ஆர்யா இப்போதெல்லாம் சமிக்ஷாவை கண்டுகொள்வதே இல்லையாம். அவரது கவனம் சமிக்ஷாவிடமிருந்து விலகி விட்டது.

    அய்யாவோட கவனம் இப்போது பதபத பத்மப்பிரியா மீது தான் என்கிறார்கள்கோடம்பாக்கம் குருவிகள்.

    இந்த சோகத்தில் இருக்கும் சமிக்ஷாவை சந்தோஷப்படுத்தும் வகையில் வந்ததுகன்னட பட வாய்ப்பு.


    சிம்பு கம்பாக நடித்திருந்த மன்மதன் இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில்தமிழில் ஜோதிகா செய்திருந்த கேரக்டரை செய்ய சமிக்ஷாவை கூப்பிட்டுஅனுப்பியிருக்கிறார்கள். அவரும் ஒத்துக் கொண்டு விட்டாராம். விரைவில் ஷூட்டிங்தொடங்கவுள்ளதாம்.

    கன்னடம் தவிர மலையாளம், தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளார் சமிக்ஷா.

    இக்கரைக்கு அக்கரை பச்சை..

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X