Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சில்க் பெயரில் விபச்சாரி கதையைப் படமாக்குகிறார்கள்- கன்னட நடிகை புது குண்டு!
தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தமிழிலும் ரீமேக்காகிறது. அனுஷ்கா, சில்க் அவதாரம் எடுக்கவுள்ளார். இந்த நிலையில் கன்னடத்திலும் இதே ரீமேக்காகுகிறார்கள். டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்காத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் பாகிஸ்தான் கவர்ச்சி குண்டு வீணா மாலிக் நடிக்கப் போகிறார்.
ஆனால் வீணாவை முயற்சிப்பதற்கு முன்பு கன்னடத்தில் பிரபலமாக உள்ள சிலரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் பின்வாங்கியதால்தான் வேறு வழியில்லாமல் கவர்ச்சி நிறைந்து வழியும் வீணாவைப் பிடித்துள்ளனர்.
முதலில் அணுகப்பட்டவர்களில் ஒருவர் நிகிதா துக்ரால். ஆனால் நிகிதா தயங்கவே, அடுத்து பூஜா காந்தியை பிடித்துள்ளனர். ஆனால் அவரும் நிராகரித்து விட்டாராம். இதுகுறித்து பூஜாவிடம் கேட்டபோது, என்னை அணுகியது உண்மைதான். ஆனால் அதை நான் பரிசீலிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தியில் அந்தப் படத்தை அருமையாக உருவாக்கியிருந்தனர். அதை ரீமேக் செய்வது என்பது பொருத்தமாக இருக்காது என்பது எனது எண்ணம். இதனால்தான் அதை நான் ஏற்கவில்லை. இத்தோடு விட்டுவிடலாமே இதை... என்கிறார்.
ஏன் சில்க் வேடம் வேண்டாம் என்றீர்கள் என்று நிகிதாவிடம் கேட்டால், சில்க் கதை என்றுதான் சொல்கிறார்கள். படத்தின் பெயரும் அப்படித்தான் உள்ளது. ஆனால் ஒரு விபச்சாரியின் கதையைத்தான் படமாக்கப் போகிறார்கள். கதை அப்படித்தான் செல்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை.
மேலும் இது சில்க் ஸ்மிதாவுக்கும் மரியாதை செய்வதாக இருக்காது. இந்தப் படத்தை நான் செய்தால் அது கன்னட ரசிகர்களை ஏமாற்றுவற்குச் சமம். இந்தப் படத்தில் நான் இல்லை என்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் இந்தப் புகாரை படத்தின் இயக்குநரான திரிஷூல் மறுத்துள்ளார்.
இதுவே ஒரு பெரிய கதையாக இருக்கும் போலிருக்கே...!