Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சில்க் பெயரில் விபச்சாரி கதையைப் படமாக்குகிறார்கள்- கன்னட நடிகை புது குண்டு!
தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தமிழிலும் ரீமேக்காகிறது. அனுஷ்கா, சில்க் அவதாரம் எடுக்கவுள்ளார். இந்த நிலையில் கன்னடத்திலும் இதே ரீமேக்காகுகிறார்கள். டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்காத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் பாகிஸ்தான் கவர்ச்சி குண்டு வீணா மாலிக் நடிக்கப் போகிறார்.
ஆனால் வீணாவை முயற்சிப்பதற்கு முன்பு கன்னடத்தில் பிரபலமாக உள்ள சிலரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் பின்வாங்கியதால்தான் வேறு வழியில்லாமல் கவர்ச்சி நிறைந்து வழியும் வீணாவைப் பிடித்துள்ளனர்.
முதலில் அணுகப்பட்டவர்களில் ஒருவர் நிகிதா துக்ரால். ஆனால் நிகிதா தயங்கவே, அடுத்து பூஜா காந்தியை பிடித்துள்ளனர். ஆனால் அவரும் நிராகரித்து விட்டாராம். இதுகுறித்து பூஜாவிடம் கேட்டபோது, என்னை அணுகியது உண்மைதான். ஆனால் அதை நான் பரிசீலிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தியில் அந்தப் படத்தை அருமையாக உருவாக்கியிருந்தனர். அதை ரீமேக் செய்வது என்பது பொருத்தமாக இருக்காது என்பது எனது எண்ணம். இதனால்தான் அதை நான் ஏற்கவில்லை. இத்தோடு விட்டுவிடலாமே இதை... என்கிறார்.
ஏன் சில்க் வேடம் வேண்டாம் என்றீர்கள் என்று நிகிதாவிடம் கேட்டால், சில்க் கதை என்றுதான் சொல்கிறார்கள். படத்தின் பெயரும் அப்படித்தான் உள்ளது. ஆனால் ஒரு விபச்சாரியின் கதையைத்தான் படமாக்கப் போகிறார்கள். கதை அப்படித்தான் செல்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை.
மேலும் இது சில்க் ஸ்மிதாவுக்கும் மரியாதை செய்வதாக இருக்காது. இந்தப் படத்தை நான் செய்தால் அது கன்னட ரசிகர்களை ஏமாற்றுவற்குச் சமம். இந்தப் படத்தில் நான் இல்லை என்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் இந்தப் புகாரை படத்தின் இயக்குநரான திரிஷூல் மறுத்துள்ளார்.
இதுவே ஒரு பெரிய கதையாக இருக்கும் போலிருக்கே...!