Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யாரையும் காதலிக்கவில்லை - சந்தியா
காதல் நாயகி சந்தியா, படு நிதானமாக கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து வருகிறார். செலக்டிவான ரோல்களில் மட்டும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக கண்ணாமூச்சி ஏனடா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மூண்டதாக செய்திகள் வெளியானது. இருவரும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
இதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜஸ்ட் பிரண்ட்ஷிப் என்று மட்டும் கூறி வந்தார் சந்தியா. இந்த நிலையில் முதல் முறையாக காதல் எல்லாம் கிடையாது என்று மறுத்துள்ளார் சந்தியா.
பிருத்விராஜுடன் நட்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு சந்தியா பொறிந்து தள்ளியுள்ளார். நான் நடிக்கும் எல்லா கதாநாயகர்களுடனும் சேர்த்து கிசு கிசு செய்தி வருவது வழக்கமாகி விட்டது. இதெல்லாம் எதுவும் உண்மை கிடையாது. நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறுகிறார் சந்தியா.
சந்தியா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், நம்புவோம்.