Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யாரையும் காதலிக்கவில்லை - சந்தியா
காதல் நாயகி சந்தியா, படு நிதானமாக கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து வருகிறார். செலக்டிவான ரோல்களில் மட்டும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக கண்ணாமூச்சி ஏனடா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மூண்டதாக செய்திகள் வெளியானது. இருவரும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
இதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜஸ்ட் பிரண்ட்ஷிப் என்று மட்டும் கூறி வந்தார் சந்தியா. இந்த நிலையில் முதல் முறையாக காதல் எல்லாம் கிடையாது என்று மறுத்துள்ளார் சந்தியா.
பிருத்விராஜுடன் நட்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு சந்தியா பொறிந்து தள்ளியுள்ளார். நான் நடிக்கும் எல்லா கதாநாயகர்களுடனும் சேர்த்து கிசு கிசு செய்தி வருவது வழக்கமாகி விட்டது. இதெல்லாம் எதுவும் உண்மை கிடையாது. நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறுகிறார் சந்தியா.
சந்தியா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், நம்புவோம்.