twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோலோ ஆனார் சந்தியா! சந்தியா இப்போதெல்லாம் படப்பிடிப்புத் தளங்களுக்கு தனியாகவே வருகிறாராம். கூட வரும் அம்மா உள்ளிட்டபரிவாரங்களை கட் செய்து விட்டாராம்.காதல் படம் மூலம் ஓவர் நைட்டில் டாப்புக்குப் போனவர் சந்தியா. அந்ததப் படத்திற்குப் பிறகு அவரது ரேஞ்ச் உயர்ந்தாலும்,அடுத்த படம் எதுவும் தமிழில் வராததால், சந்தியாவின் நிலை இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் மலையாளத்தில் சந்தியா நடித்த முதல் படமான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படு தோல்வி அடைந்து விட்டதாம்.இதனால் சந்தியா படு அப்செட். தான் தான் மலையாளத்தின் அடுத்த மஞ்சு வாரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தசந்தியாவுக்கு இந்தத் தோல்வி பெரிய அதிருப்தியைக் கொடுத்துள்ளது.இதனால் கொஞ்ச நாளைக்கு தமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். எனவே இப்போதைக்கு மலையாளம்உள்ளிட்ட வேறு மொழிகளில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். சந்தியாவுக்கு கிடைத்துள்ள பெயரை டேமேஜ் செய்வதற்காகவே சிலர் கிளம்பியுள்ளதாக சந்தியா வட்டாரம் நினைக்கிறது.சம்பளத்தை ஏற்றி விட்டார் சந்தியா, ஷூட்டிங்கிற்கு நிறையப் பேரை கூடவே கூட்டி வருகிறார், கண்டிஷன் எல்லாம் போடஆரம்பித்து விட்டார் என தொடர்ந்து செய்திகள் வருவதால் கொஞ்சம் உஷாராகியுள்ளார் சந்தியா.எப்போதுமே ஷூட்டிங்கு சந்தியாவுடன் அவரது அம்மாவும் உடன் வருவார். அவ்வப்போது அப்பாவும் வருவாராம். சிலநேரங்களில் அண்ணனும் வருவார். இப்படி யாராவது ஒருவர் கூடவே ஒட்டிக் கொண்டு வருவதால் இயக்குனர்களுக்கும் சிலசிரமங்கள் ஏற்படுகிறதாம்.இதனால் இப்போது யாரையும் கூட கூட்டிக் கொண்டு வருவதில்லைஎன்று முடிவு செய்து விட்டார் சந்தியா. அவர் மட்டுமேகம்பெனி காரில் வந்து இறங்கி நடித்துக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.அதேபோல, தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும் கூறுகிறார் சந்தியா. காதல் படத்தில் வாங்கியதை விட சற்றே கூடுதலாகவாங்குகிறேன் அவ்வளவுதான். பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தியதாக வரும் செய்திகள் எல்லாமே புளுகு என்றுமுகத்தில் ஆதங்கத்தைக் காட்டுகிறார்.தொடர்ந்து நல்ல புள்ளையா இருந்தா சரித்தான்!

    By Staff
    |

    சந்தியா இப்போதெல்லாம் படப்பிடிப்புத் தளங்களுக்கு தனியாகவே வருகிறாராம். கூட வரும் அம்மா உள்ளிட்டபரிவாரங்களை கட் செய்து விட்டாராம்.

    காதல் படம் மூலம் ஓவர் நைட்டில் டாப்புக்குப் போனவர் சந்தியா. அந்ததப் படத்திற்குப் பிறகு அவரது ரேஞ்ச் உயர்ந்தாலும்,அடுத்த படம் எதுவும் தமிழில் வராததால், சந்தியாவின் நிலை இன்னும் உறுதியாகவில்லை.

    ஆனால் மலையாளத்தில் சந்தியா நடித்த முதல் படமான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படு தோல்வி அடைந்து விட்டதாம்.இதனால் சந்தியா படு அப்செட். தான் தான் மலையாளத்தின் அடுத்த மஞ்சு வாரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தசந்தியாவுக்கு இந்தத் தோல்வி பெரிய அதிருப்தியைக் கொடுத்துள்ளது.

    இதனால் கொஞ்ச நாளைக்கு தமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். எனவே இப்போதைக்கு மலையாளம்உள்ளிட்ட வேறு மொழிகளில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

    சந்தியாவுக்கு கிடைத்துள்ள பெயரை டேமேஜ் செய்வதற்காகவே சிலர் கிளம்பியுள்ளதாக சந்தியா வட்டாரம் நினைக்கிறது.சம்பளத்தை ஏற்றி விட்டார் சந்தியா, ஷூட்டிங்கிற்கு நிறையப் பேரை கூடவே கூட்டி வருகிறார், கண்டிஷன் எல்லாம் போடஆரம்பித்து விட்டார் என தொடர்ந்து செய்திகள் வருவதால் கொஞ்சம் உஷாராகியுள்ளார் சந்தியா.

    எப்போதுமே ஷூட்டிங்கு சந்தியாவுடன் அவரது அம்மாவும் உடன் வருவார். அவ்வப்போது அப்பாவும் வருவாராம். சிலநேரங்களில் அண்ணனும் வருவார். இப்படி யாராவது ஒருவர் கூடவே ஒட்டிக் கொண்டு வருவதால் இயக்குனர்களுக்கும் சிலசிரமங்கள் ஏற்படுகிறதாம்.

    இதனால் இப்போது யாரையும் கூட கூட்டிக் கொண்டு வருவதில்லைஎன்று முடிவு செய்து விட்டார் சந்தியா. அவர் மட்டுமேகம்பெனி காரில் வந்து இறங்கி நடித்துக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.

    அதேபோல, தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும் கூறுகிறார் சந்தியா. காதல் படத்தில் வாங்கியதை விட சற்றே கூடுதலாகவாங்குகிறேன் அவ்வளவுதான். பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தியதாக வரும் செய்திகள் எல்லாமே புளுகு என்றுமுகத்தில் ஆதங்கத்தைக் காட்டுகிறார்.

    தொடர்ந்து நல்ல புள்ளையா இருந்தா சரித்தான்!

      Read more about: good girl sandhya
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X