twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்தியாவின் பயம்! சந்தியா ரொம்ப பயந்து போயிருக்கிறாராம். வீட்டில் கூட யாரிடமும் சரியாகப் பேசுவதில்லையாம், சரியான சாப்பாடு, மனஅமைதி இவையெல்லாம் போய் ரொம்ப நாளாகிறதாம்.என்ன ஆச்சு சந்தியாவுக்கு? ஒன்னும் ஆகவில்லை, புள்ளைக்கு பரீட்சை வரப் போகிறது. அதனால்தான் இத்த அதகளமும்.காதல் படம் மூலம் பட்டென சினிமாவில் நுழைந்து, சட்டென வளர்ந்தவர் சந்தியா. இப்போது கை நிறையப் படங்களுடன் ரொம்பசந்தோஷமாக இருக்கிறார்.காதல் படத்தில் நடித்த போது அவர் 10வது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்காக அடிக்க லீவுபோட்டுப் போனதால் கடுப்பாகிப் போன பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியை விட்டு நீக்கி விட்டது.இதனால் அதிர்ந்து போன சந்தியாவை அவரது அப்பா, அம்மாவும், அண்ணனும் ஆறுதல்படுத்தி கவலைப் படாதே கண்மணி,செப்டம்பர் இருக்கவே இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூல் படுத்தினர்.இதோ செப்டம்பர் வந்து விட்டது. பரீட்சையும் நெருங்கி விட்டது. இதனால் சேச்சிக்கு டென்ஷன் அதிகமாகி விட்டது.எப்படியாவது பரீட்சையில் பாஸ் ஆகி விட வேண்டும் என்பதற்காக இரவு பகலாக கண் முழித்துப் படிக்கிறாராம் சந்தியா.இதற்காக படப்பிடிப்பைக் கூட கேன்சல் செய்து விட்டாராம்.அவருக்கு உதவியாக அப்பா, அம்மா, அண்ணன் இருக்கிறார்களாம். பரீட்சையிரல் எப்படியும் நல்ல மார்க்குகளுடன் பாஸ் ஆகிவிடுவேன் என்று உறுதியாக கூறுகிறார் சந்திதயா.பரீட்சைக்குப் பிறகு படப்பிடிப்புகளில் படு தீவிரமாக இறங்கப் போகிறாராம் சந்தியா சந்தியா இப்போது வல்லவன், கூடல் நகர்உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பரீட்சை காரணமாக இந்தப் படங்களின் படப்பிடிப்புகளை 10 நாளைக்குஒத்திவைத்துள்ளாராம் சந்தியா.ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இடை இடையே புத்தகங்களை எடுத்த ரிவிஷன் விட்டாராம். ஆனால்இது சரிப்படாததால், மொத்தமாக பிரேக் எடுத்துக் கொண்டு படித்து வருகிறாராம்.நடிச்சு பதராகப் போகாமல் படித்து பெரிய ஆளாகனும்னு நினைக்கிற சந்தியா ரொம்ப புத்திசாலிதான்தி!

    By Staff
    |

    சந்தியா ரொம்ப பயந்து போயிருக்கிறாராம். வீட்டில் கூட யாரிடமும் சரியாகப் பேசுவதில்லையாம், சரியான சாப்பாடு, மனஅமைதி இவையெல்லாம் போய் ரொம்ப நாளாகிறதாம்.

    என்ன ஆச்சு சந்தியாவுக்கு? ஒன்னும் ஆகவில்லை, புள்ளைக்கு பரீட்சை வரப் போகிறது. அதனால்தான் இத்த அதகளமும்.காதல் படம் மூலம் பட்டென சினிமாவில் நுழைந்து, சட்டென வளர்ந்தவர் சந்தியா. இப்போது கை நிறையப் படங்களுடன் ரொம்பசந்தோஷமாக இருக்கிறார்.

    காதல் படத்தில் நடித்த போது அவர் 10வது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்காக அடிக்க லீவுபோட்டுப் போனதால் கடுப்பாகிப் போன பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியை விட்டு நீக்கி விட்டது.

    இதனால் அதிர்ந்து போன சந்தியாவை அவரது அப்பா, அம்மாவும், அண்ணனும் ஆறுதல்படுத்தி கவலைப் படாதே கண்மணி,செப்டம்பர் இருக்கவே இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூல் படுத்தினர்.


    இதோ செப்டம்பர் வந்து விட்டது. பரீட்சையும் நெருங்கி விட்டது. இதனால் சேச்சிக்கு டென்ஷன் அதிகமாகி விட்டது.எப்படியாவது பரீட்சையில் பாஸ் ஆகி விட வேண்டும் என்பதற்காக இரவு பகலாக கண் முழித்துப் படிக்கிறாராம் சந்தியா.இதற்காக படப்பிடிப்பைக் கூட கேன்சல் செய்து விட்டாராம்.

    அவருக்கு உதவியாக அப்பா, அம்மா, அண்ணன் இருக்கிறார்களாம். பரீட்சையிரல் எப்படியும் நல்ல மார்க்குகளுடன் பாஸ் ஆகிவிடுவேன் என்று உறுதியாக கூறுகிறார் சந்திதயா.

    பரீட்சைக்குப் பிறகு படப்பிடிப்புகளில் படு தீவிரமாக இறங்கப் போகிறாராம் சந்தியா சந்தியா இப்போது வல்லவன், கூடல் நகர்உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பரீட்சை காரணமாக இந்தப் படங்களின் படப்பிடிப்புகளை 10 நாளைக்குஒத்திவைத்துள்ளாராம் சந்தியா.

    ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இடை இடையே புத்தகங்களை எடுத்த ரிவிஷன் விட்டாராம். ஆனால்இது சரிப்படாததால், மொத்தமாக பிரேக் எடுத்துக் கொண்டு படித்து வருகிறாராம்.

    நடிச்சு பதராகப் போகாமல் படித்து பெரிய ஆளாகனும்னு நினைக்கிற சந்தியா ரொம்ப புத்திசாலிதான்தி!

      Read more about: sandhya in exam fear
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X