Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி
சென்னை : என் வாழ்கையில நான் எதையும் பிளான் பண்ணதே இல்லை எல்லாம் தானா நடக்குது விஜே சங்கீதா கூறியுள்ளார்.
நாடக நடிகை மற்றும் தொகுப்பாளரான சங்கீதா தற்போது அழகு நாடகத்தில் வில்லியாக நடித்து வருகிறார். தற்போது அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை மற்றும் தொகுப்பாளர் சங்கீதா முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த தொலைக்காட்சியில் செந்தமிழ் பெண்ணே, பிறந்தநாள் வாழ்த்துக்கள்,24ப்ரேம்ஸ், பிராங்கா சொல்லட்டா மற்றும் லேடீஸ் சாய்ஸ் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார்.
சின்னதிரையில் தொகுப்பாளராக அனைவரும் ரசித்த விஜே சங்கீதா ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான டிக் டிக் டிக் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், நான் வாழ்க்கையில் எதையும் பிளான் பண்ணது இல்லை என்றார். ஏனெனில் பிளான் பண்ணி, தோற்று போனால் அது மிக பெரிய வலியாக மாறிவிடும் அதனால் நான் எதையும் பிளான் பண்ணது கிடையாது என்று கூறினார் .
நான் ஐடி கம்பெனியில் பணியாற்றும் போது இதனை எதிர்பார்க்கவில்லை அதற்கு பிறகு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் நான் எதனையும் பிளான் செய்யவில்லை அதற்கு பிறகு அழகு நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் முதலில் சாதாரணமாக தான் வடிவமைக்கபட்டது அதன் பின் அப்படியே நான் நடிக்கும் பூர்ணா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமாக மாற்றபட்டது என்று கூறினார் .
மேலும் தான் சிறு வயதில் இருந்தே தளபதி ரசிகை தனக்கு தளபதி விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் . 90ஸ் கிட்ஸ் நான், விஜய் படம் பார்த்து தான் நான் வளர்ந்தேன் அதனால் எனக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் .
மேலும் எனக்கு ரஜினியின் ஸ்டைல் மிகவும் பிடிக்கும் ரஜினி படங்களில் அவரின் ஸ்டைலை மிகவும் ரசித்து பார்த்து இருக்கிறேன் என்றார் , தொகுப்பாளர் அழகு நாடகத்தில் நடிப்பதை போல ரஜினியுடன் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க 'அய்யோ நான் அத கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்ல' நான் எதிரே பார்க்காத ஒன்று என கூறினார். வாழ்வில் எதையும் பிளான் பண்ணாமல் உண்மையான உழைப்பின் மூலம் கட்டாயம் உயரலாம் என்றும் தெரிவித்து கொண்டார்.