சஞ்சனா என்னொரு பஞ்சாப் பறவை மீண்டும் ஒரு பஞ்சாப் பறவை கோடம்பாக்கத்தில் லேண்ட் ஆகியிருக்கிறது.சமீப காலத்தில் கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய பஞ்சாபிக்காரர் சிம்ரன் தான். டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் வந்து கடைவிரித்து நன்றாகவே பிஸினஸ் செய்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.இப்போது அவரைப் போலவே டெல்லியில் வசிக்கும் பஞ்சாபியான சஞ்சனா என்பவரும் தமிழுக்கு வந்திருக்கிறார்.கமலால் நம்மவர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது ஓவர் ஆக்டிங் மற்றும் ஓவர் சைஸ் காரணமாக சைடு ரோல்களில் வந்துகொண்டிருக்கும் கரண் தான் இவரை தமிழுலகுக்கு அழைத்து வந்திருக்கிறார். கொக்கி என்ற படத்தில் கரண் ஹீரோவாகநடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடி தான் சஞ்சனா.படத்தை பிரபு சாலமன் என்பவர் கதை எழுதி இயக்குகிறார். இவர் தான் விக்ரமை வைத்து கிங் என்ற டப்பா படத்தைஇயக்கியவர்.இந்தப் படத்தின் மூலம் முதன்முதலில் ஹீரோ ஆகும் கரண், இதற்காக தனது சொந்த செலவில் தி.நகரில் ஒரு ஹோட்டலில் பார்ட்டிகொடுத்தார். அதில் கமல் கலந்து கொண்டு கரணை வாழ்த்தினார். பிரண்ட்ஸ் சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்க, தயாரிப்பாளர்கள்உபயத்தில் சொகுசு ஹோட்டலில் தங்கியபடி நடித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சனா.பூர்வீகம் பஞ்சாப் என்றாலும் படித்தது மும்பையிலாம். செட்டில் ஆனது டெல்லி என்றாலும் தனது எதிர்காலம் சென்னையி"கையில் தான் இருக்கிறது என்கிறார்.சினிமாவுக்கு எப்படி வந்தாராம்?.. படிக்கும்போது பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்திருக்கிறார். ஸ்விம்மிங்கும் பிடிக்குமாம்.டூ பீசில் இவர் ஒரு நீச்சல் குளத்தில் ஸ்விம் செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்து இவரைப் பிடித்துப் போன ஒரு பெங்காலிஇயக்குனர் தனது படத்தில் அறிமுகப்படுத்தினாராம்.அப்படியாக சினிமாவுக்கு வந்தவர் இந்தியில் போட்டி போடுவது சிரமம் என்பதை உணர்ந்து கொண்டதால் தமிழில் இடம் பிடிக்கவந்திருக்கிறார்.வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், சஞ்சனாவுக்கும் வாழ்வு தருமா?
மீண்டும் ஒரு பஞ்சாப் பறவை கோடம்பாக்கத்தில் லேண்ட் ஆகியிருக்கிறது.
சமீப காலத்தில் கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய பஞ்சாபிக்காரர் சிம்ரன் தான். டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் வந்து கடைவிரித்து நன்றாகவே பிஸினஸ் செய்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.
இப்போது அவரைப் போலவே டெல்லியில் வசிக்கும் பஞ்சாபியான சஞ்சனா என்பவரும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
கமலால் நம்மவர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது ஓவர் ஆக்டிங் மற்றும் ஓவர் சைஸ் காரணமாக சைடு ரோல்களில் வந்துகொண்டிருக்கும் கரண் தான் இவரை தமிழுலகுக்கு அழைத்து வந்திருக்கிறார். கொக்கி என்ற படத்தில் கரண் ஹீரோவாகநடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடி தான் சஞ்சனா.
படத்தை பிரபு சாலமன் என்பவர் கதை எழுதி இயக்குகிறார். இவர் தான் விக்ரமை வைத்து கிங் என்ற டப்பா படத்தைஇயக்கியவர்.
இந்தப் படத்தின் மூலம் முதன்முதலில் ஹீரோ ஆகும் கரண், இதற்காக தனது சொந்த செலவில் தி.நகரில் ஒரு ஹோட்டலில் பார்ட்டிகொடுத்தார். அதில் கமல் கலந்து கொண்டு கரணை வாழ்த்தினார்.
பிரண்ட்ஸ் சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்க, தயாரிப்பாளர்கள்உபயத்தில் சொகுசு ஹோட்டலில் தங்கியபடி நடித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சனா.
பூர்வீகம் பஞ்சாப் என்றாலும் படித்தது மும்பையிலாம். செட்டில் ஆனது டெல்லி என்றாலும் தனது எதிர்காலம் சென்னையி"கையில் தான் இருக்கிறது என்கிறார்.
சினிமாவுக்கு எப்படி வந்தாராம்?.. படிக்கும்போது பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்திருக்கிறார். ஸ்விம்மிங்கும் பிடிக்குமாம்.டூ பீசில் இவர் ஒரு நீச்சல் குளத்தில் ஸ்விம் செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்து இவரைப் பிடித்துப் போன ஒரு பெங்காலிஇயக்குனர் தனது படத்தில் அறிமுகப்படுத்தினாராம்.
அப்படியாக சினிமாவுக்கு வந்தவர் இந்தியில் போட்டி போடுவது சிரமம் என்பதை உணர்ந்து கொண்டதால் தமிழில் இடம் பிடிக்கவந்திருக்கிறார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், சஞ்சனாவுக்கும் வாழ்வு தருமா?


Click it and Unblock the Notifications