Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சந்தானம் பட நடிகைக்கு கொரோனா…மருத்துவமனையில் அனுமதி!
சென்னை : சந்தானம் பட நடிகை வைபவி சாண்டில்யா கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2வது அலை
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 56,211 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 271 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 37,028 பேர் குணமடைந்துள்ளனர்.
மாஸ்க் கட்டாயம்
தமிழகத்திலும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.
கொரோனா
கொரோனா வைரலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கு கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி
இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் மற்றும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி சாண்டில்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.பசியின்மை மற்றும் சுவை மற்றும் வாசனை இன்மை, இருமல் இருந்ததால் சோதனை மேற்கொண்டதாகவும், சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.