Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னதான் தேசிய விருதெல்லாம் வாங்கினாலும் அந்த ஹீரோ கூட நடிக்கவே இல்லையே... சீனியர் நடிகை கவலை
சென்னை: நடிப்புக்கு தேசிய விருதுகளை பெற்றிருந்தாலும் அந்த ஹீரோவுடன் நடிக்கவில்லை என்ற குறை இருக்கிறது என்று பழம்பெரும் நடிகை சாரதா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாரதா. நாடகங்களில் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழில் வெளியாகி ஹிட்டான ரத்தக் கண்ணீர் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.
தமிழில், குங்குமம், துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மிஸ்டர் பாரத்
எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன், சிவாஜியின் என்னை போல் ஒருவன், சரித்திர நாயகன், ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
3 தேசிய விருது
இவர் துலாபாரம், சுயம்வரம் ஆகிய மலையாள படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும் நிமஜனம் என்ற தெலுங்கு படத்தின் சிறந்த நடிப்புக்காகவும் மூன்று முறை தேசிய விருதை பெற்றவர். இடையில் அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
சூப்பர் ஸ்டார்கள்
கடந்த சில வருடங்களாக, இவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அப்போது அவர் பேசும்போது, 'அந்த கால சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துள்ளேன்.
மோகன்லாலுடன்
இந்த கால சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துவிட்டேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை இருக்கிறது. அது எப்போது தீரும் என்று தெரியவில்லை. மலையாளத்தில் மம்மூட்டியுடன் ராப்பகல் என்ற படத்தில் நடித்துவிட்டேன். ஆனால், மோகன்லாலுடன் ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை. அந்த குறை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!