ஸ்லிம் ஆகிறார் சரண்யா அந்த கால டபுள் மீனிங் புகழ் இயக்குனர்-கம்-நடிகர் பாக்யாராஜின் புத்திரி சரண்யா எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகும்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.திரைக்கதை அமைப்பதில் இந்தியாவிலேயே இவரைப் போல இல்லை என்று தூக்கி வைத்து பேசப்பட்டவர் பாக்யராஜ்.ஆரம்பத்தில் நல்ல படங்கள் தந்த இவர், பின்னாளில் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போக முடியாத நிலைக்கு தமிழர்களைத்தள்ளினார்.முழுக்கவும் டபுள் மீனிங் நிறைந்த படங்களை எடுத்துத் தள்ளி கடைசியில் புதுமுக இயக்குனர்களின் வேகம், கதை சொல்லும்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போனார்.இப்போது அவரது புத்திரியான சரண்யா, அப்பாவின் இயக்கத்தில் பாரிஜாதம் என்ர படம் மூலம் சினிமாவில் குதித்துள்ளார். மகளுடைய முதல் படம் என்பதால் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் பாரிஜாதத்தை களம் இறக்குகிறார் பாக்யராஜ். படத்தின் பாடல்கேசட்டுகளை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வெளியிட்டு அமர்க்களப்படுத்தினார். சரண்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர்கேரளாவைச் சேர்ந்த பிருத்வி ராஜ்.இதுவரை எடுக்கப்பட்ட படத்தைப் போட்டு பார்த்தபோது படம் நன்றாக வந்திருப்பதில் பாக்யராஜுக்கு திருப்தியாம்.அதேசமயம் இன்னொரு விஷயம் இடித்துள்ளதாம். அதாவது சரண்யா நன்றாகவே குண்டடித்தது போலத் தெரிகிறதாம்.இதே கருத்து பூர்ணிமா பாக்யராஜுக்கும் ஏற்பட்டுள்ளது.இப்படி இருந்தால் அடுத்து தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிப்பது கஷ்டம் என்பதால் மகளை வெயிட்டைக் குறைத்து ஸ்லிம்ஆக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இப்போது உணவுக் கட்டுப்பாட்டில் இறங்கியுள்ளார் சரண்யா. அத்தோடு நடனப் பயிற்சியிலும் தீவிரமாககுதித்துள்ளார். அத்தோடு, உடற்பயிற்சியிலும் மகளை தீவிரமாக இறக்கி விட்டுள்ளார்கள் பாக்யராஜ் தம்பதியினர்.படம் முடிவதற்குள் வெயிட்டைக் குறைத்து, அடுத்த படத்துக்கு ஸ்லிம்மாகத் தயாராகிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்சரண்யாவுக்கு.பாரிஜாதம் வெற்றி பெறுகிறதோ அல்லது பெட்டிக்கே போகிறதோ, மகளை சினிமாவில் ஒரு ரவுண்டு வர வைக்கும் முயற்சியில்தீவிரமாக இருக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும். இதற்காக வெளியார் படங்களில் சரண்யாவுக்கு சான்ஸ் தேடும் வேலையும் நடக்கிறது.உடனே வெளிப்படம் ஏதும் அமையாவிட்டால் மீண்டும் ஒரு படத்தை பாக்யராஜே இயக்குவாராம். அதிலும் சரண்யாவேநடிப்பாராம்.உடம்பு வெயிட்டோடு, நடிப்பிலும் வெயிட்டாக இருந்தால் சரி.
திரைக்கதை அமைப்பதில் இந்தியாவிலேயே இவரைப் போல இல்லை என்று தூக்கி வைத்து பேசப்பட்டவர் பாக்யராஜ்.ஆரம்பத்தில் நல்ல படங்கள் தந்த இவர், பின்னாளில் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போக முடியாத நிலைக்கு தமிழர்களைத்தள்ளினார்.
முழுக்கவும் டபுள் மீனிங் நிறைந்த படங்களை எடுத்துத் தள்ளி கடைசியில் புதுமுக இயக்குனர்களின் வேகம், கதை சொல்லும்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போனார்.
இப்போது அவரது புத்திரியான சரண்யா, அப்பாவின் இயக்கத்தில் பாரிஜாதம் என்ர படம் மூலம் சினிமாவில் குதித்துள்ளார்.
இதுவரை எடுக்கப்பட்ட படத்தைப் போட்டு பார்த்தபோது படம் நன்றாக வந்திருப்பதில் பாக்யராஜுக்கு திருப்தியாம்.அதேசமயம் இன்னொரு விஷயம் இடித்துள்ளதாம். அதாவது சரண்யா நன்றாகவே குண்டடித்தது போலத் தெரிகிறதாம்.
இதே கருத்து பூர்ணிமா பாக்யராஜுக்கும் ஏற்பட்டுள்ளது.
இப்படி இருந்தால் அடுத்து தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிப்பது கஷ்டம் என்பதால் மகளை வெயிட்டைக் குறைத்து ஸ்லிம்ஆக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
படம் முடிவதற்குள் வெயிட்டைக் குறைத்து, அடுத்த படத்துக்கு ஸ்லிம்மாகத் தயாராகிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்சரண்யாவுக்கு.
பாரிஜாதம் வெற்றி பெறுகிறதோ அல்லது பெட்டிக்கே போகிறதோ, மகளை சினிமாவில் ஒரு ரவுண்டு வர வைக்கும் முயற்சியில்தீவிரமாக இருக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும்.
உடனே வெளிப்படம் ஏதும் அமையாவிட்டால் மீண்டும் ஒரு படத்தை பாக்யராஜே இயக்குவாராம். அதிலும் சரண்யாவேநடிப்பாராம்.
உடம்பு வெயிட்டோடு, நடிப்பிலும் வெயிட்டாக இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications