‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது?’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா!
விருது விழாவிற்கு ஆபாசமாக உடை அணிந்து சென்றதாக சாயிஷாவை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமாக உடையணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விரைவில் ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகை சாயிஷா.
தமிழில் வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாக, நீண்ட நாட்களாக உறுதிப் படுத்தப்படாத தகவல் உலா வந்த வண்ணம் இருந்தது. கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த வாரம் காதலர் தினத்தன்று தங்களது காதலை ஆர்யாவும், சாயிஷாவும் சமூகவலைதளப் பக்கம் மூலம் உறுதி செய்தனர். அடுத்தமாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் ஆர்யாவும், சாயிஷாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாயிஷா. அதில் கருப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் அவர்.
இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக பலர் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். ஆனால், சிலரோ திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து பொது இடத்திற்கு செல்வது என சாயிஷாவைத் திட்டி பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











