twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சதீஷுடன் விரைவில் திருமணம்- சீதா டிவி நடிகர் சதீஷை விரைவில் திருமணம் செய்யப்போவதாக நடிகை சீதா அறிவித்துள்ளார்.தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகர் சதீஷுக்கும், நடிகை சீதாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாகமுன்பு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சீதாவிடமிருந்து பார்த்திபன் விலகினார். இருவரும் விவாகரத்தும்பெற்றனர். இந் நிலையில் நடிகர் சதீஷுக்கு "காதல் வளர்த்தேன் படத்தில் சீதா வாய்ப்பு கேட்டதாகவும், முதலில் வாய்ப்பு தருவதாக கூறிவிட்டு பின்னர் தர மறுத்ததால், இயக்குனர் கலா புதியவனுக்கும், சீதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தன்னை ஆபாச வார்த்தைகளால் கலா புதியவன் திட்டியதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதாபுகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில், தனக்கும், கலா புதியவனுக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்து விட்டதாக சீதா கூறினார்.மேலும் நடிகர்சதீஷுக்காக தான் வாய்ப்பு கேட்கவில்லை என்றும் சீதா கூறினார். இதுதொடர்பாக சீதா கூறுகையில், நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை. வாய்ப்புகள் தான் என்னைத் தேடிவந்துள்ளன. அதேபோல யாருக்காகவும் நான் சிபாரிசு செய்வதில்லை. காதல் வளர்த்தேன் படத்திற்கு இயக்குனர் கலாபுதியவனையே நான் தான் சிபாரிசு செய்தேன். கலா புதியவனின் சொந்த பெயர் சீனிவாசன். இந்தப் பெயரில் தான் அவரை நான் அழைப்பேன். என் கையினால் அவருக்குசோறு போட்டிருக்கிறேன். டைரக்டராக முடியவில்லையே என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு நான் தான்வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்.காதல் வளர்த்தேன் தயாரிப்பாளர் ஹயாத் என் குடும்ப நண்பர் என்பதால் நான் சொன்னதும் கலா புதியவனுக்கு வாய்ப்புகொடுத்தார்.அப்படி இருக்க நான் நடிகர் சதிஷூக்கு சிபாரிசு செய்வதாக வெளியான தகவலில் சற்றும் உண்மை இல்லை. அவருக்குசிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காதல் வளர்த்தேன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். 4 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அட்வான்ஸும் கொடுத்தார்கள். பின்னர் திடீரென 15 நாட்கள் நடிக்க வேண்டும் என்றுஇயக்குனர் கூறினார். ஆனால் ஒப்பந்தம் செய்தபடி 4 நாட்கள் மட்டும் தான் நடிப்பேன். அதற்கு மேல் நடிக்க முடியாது என்றுகூறினேன். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்தஇயக்குனர் கலா புதியவன், தொலைபேசியில் ஆபாசமாக பேசி திட்டினார், மிரட்டினார். இதனால் நான் போலீஸில் புகார் செய்தேன். இதனால் பயந்து போன கலா புதியவன் சமரசத்திற்கு வந்தார். இதையடுத்துவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து சமரசம் நடந்தது. எனது தம்பியை என் சார்பில் அங்கு அனுப்பினேன். அங்குஇயக்குனர் சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறினார்.இந் நிலையில் நடிகர் சதீஷை 2வது திருமணம் செய்யப்போவதாக சீதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சதீஷைநான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்.இதற்கு எனக்கு சிறிது டைம் வேண்டும். சதீஷ் குடும்பம் அவரை விட்டுப் பிரிந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.முறைப்படி அவர் விவாகரத்து வாங்கினாரா என்று தெரியவில்லை.இவற்றையெல்லாம் உறுதி செய்த பின்னர் நானும் சதீஷும் திருமணம் செய்து கொள்வது குறித்து முறைப்படி அறிவிப்பேன்என்றார் சீதா.

    By Staff
    |

    டிவி நடிகர் சதீஷை விரைவில் திருமணம் செய்யப்போவதாக நடிகை சீதா அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகர் சதீஷுக்கும், நடிகை சீதாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாகமுன்பு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சீதாவிடமிருந்து பார்த்திபன் விலகினார். இருவரும் விவாகரத்தும்பெற்றனர்.

    இந் நிலையில் நடிகர் சதீஷுக்கு "காதல் வளர்த்தேன் படத்தில் சீதா வாய்ப்பு கேட்டதாகவும், முதலில் வாய்ப்பு தருவதாக கூறிவிட்டு பின்னர் தர மறுத்ததால், இயக்குனர் கலா புதியவனுக்கும், சீதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து தன்னை ஆபாச வார்த்தைகளால் கலா புதியவன் திட்டியதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதாபுகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந் நிலையில், தனக்கும், கலா புதியவனுக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்து விட்டதாக சீதா கூறினார்.மேலும் நடிகர்சதீஷுக்காக தான் வாய்ப்பு கேட்கவில்லை என்றும் சீதா கூறினார்.

    இதுதொடர்பாக சீதா கூறுகையில், நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை. வாய்ப்புகள் தான் என்னைத் தேடிவந்துள்ளன. அதேபோல யாருக்காகவும் நான் சிபாரிசு செய்வதில்லை. காதல் வளர்த்தேன் படத்திற்கு இயக்குனர் கலாபுதியவனையே நான் தான் சிபாரிசு செய்தேன்.

    கலா புதியவனின் சொந்த பெயர் சீனிவாசன். இந்தப் பெயரில் தான் அவரை நான் அழைப்பேன். என் கையினால் அவருக்குசோறு போட்டிருக்கிறேன். டைரக்டராக முடியவில்லையே என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு நான் தான்வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்.

    காதல் வளர்த்தேன் தயாரிப்பாளர் ஹயாத் என் குடும்ப நண்பர் என்பதால் நான் சொன்னதும் கலா புதியவனுக்கு வாய்ப்புகொடுத்தார்.

    அப்படி இருக்க நான் நடிகர் சதிஷூக்கு சிபாரிசு செய்வதாக வெளியான தகவலில் சற்றும் உண்மை இல்லை. அவருக்குசிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காதல் வளர்த்தேன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள்.

    4 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அட்வான்ஸும் கொடுத்தார்கள். பின்னர் திடீரென 15 நாட்கள் நடிக்க வேண்டும் என்றுஇயக்குனர் கூறினார். ஆனால் ஒப்பந்தம் செய்தபடி 4 நாட்கள் மட்டும் தான் நடிப்பேன். அதற்கு மேல் நடிக்க முடியாது என்றுகூறினேன்.

    அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்தஇயக்குனர் கலா புதியவன், தொலைபேசியில் ஆபாசமாக பேசி திட்டினார், மிரட்டினார்.

    இதனால் நான் போலீஸில் புகார் செய்தேன். இதனால் பயந்து போன கலா புதியவன் சமரசத்திற்கு வந்தார். இதையடுத்துவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து சமரசம் நடந்தது. எனது தம்பியை என் சார்பில் அங்கு அனுப்பினேன். அங்குஇயக்குனர் சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறினார்.

    இந் நிலையில் நடிகர் சதீஷை 2வது திருமணம் செய்யப்போவதாக சீதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சதீஷைநான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

    இதற்கு எனக்கு சிறிது டைம் வேண்டும். சதீஷ் குடும்பம் அவரை விட்டுப் பிரிந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.முறைப்படி அவர் விவாகரத்து வாங்கினாரா என்று தெரியவில்லை.

    இவற்றையெல்லாம் உறுதி செய்த பின்னர் நானும் சதீஷும் திருமணம் செய்து கொள்வது குறித்து முறைப்படி அறிவிப்பேன்என்றார் சீதா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X