Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்.. வீணா மாலிக்குக்கும் அதிர்ச்சியாம்!
பாலிவுட் நாயகி வீணா மாலிக், சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முகம்மது ஆசிப் உடன் காதலில் இருந்தவர். சூதாட்ட புகாரில் சிக்கிய போது ஆதரங்களுடன் வெளியிடத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இப்போது ஐ.பி.எல் 6 போட்டியில் சூதாட்ட சர்ச்சை கிளம்பியதை அடுத்து இது பற்றி கருத்து கூறியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் வீணா மாலிக் கூறியதாவது,
வெளிநாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் சட்டப்படி தவறு. பணத்திற்காக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்திய மீடியாக்களில் நுழைந்த வீணா மாலிக் பின்னர் பரபரப்பாக எதையாவது செய்து பிரபலமடைந்தார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் சூதாட்ட புகார் சர்ச்சையில் சிக்கிய போது அந்த நேரத்தில் ஆசிப் உடன் இருந்தவர் வீணா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.