Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சின்னப் பசங்களே போதும் ... இனிமேல் மூத்தோர்களுடன் (மூத்த நடிகர்களுடன்) நடிக்கப் போவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தமுடிவை எடுத்திருக்கிறாராம் சினேகா.தமிழ் சினிமாவில் இரண்டு வகை ஹீரோக்கள், பல வகையான ஹீரோயின்கள் உள்ளனர். ரொம்ப வருஷமாகநடித்துக் கொண்டிருக்கும் இளமையான ஹீரோக்கள் ஒரு வகை. சின்ன வயசு ஹீரோக்கள் இன்னொரு வகை. மூத்த நடிகர்கள் வரிசையில் வரும் ரஜினி, கமல் ஆகியோருக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இருப்பதில்லை.ஆனால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், சரத்குமார் போன்ற இரண்டாம் கட்ட மூத்தவர்களுக்கு ஜோடிகிடைப்பது தான் பெரும் ராமாயணமாக இருக்கிறது.கமல், ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் இந்தக் கால இளசுகளுக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் இருக்கவேசெய்கிறது, ஓரிரு குட்டீஸ்களைத் தவிர. ஆனால் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க குட்டிப் பாப்பாக்கள்ரொம்பவே பயப்படுகிறார்கள்.மூத்த நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று ஜோதிகா, கோபிகா, மீரா ஜாஸ்மின், ஆசின் போன்ற பலநடிகைகள் சபதமே செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் இப்போது சினேகாவும் சேர்ந்துள்ளார். இதுவரை இவர் பெரிய நடிகர்களுடன் நடித்தது என்றால் அது கமல் மற்றும் அர்ஜூனுடன் மட்டும்தான்.பெரும்பாலும் சின்ன வயசு ஹீரோக்களுடன் தான் சினேகா நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிக்க வந்தவாய்ப்பைக் கூட இவர் நைசாக தவிர்த்து விட்டாராம்.விதி விலக்காக சின்னா படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடிக்கப் போக, அதனால் அவரது தனிப்பட்டவாழ்க்கையில் பெரும் சுனாமியே வந்து போய் விட்டதாம். இதனால் இனிமேல் மூத்த நடிகர்களுடன் நடிக்கவேகூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் அம்மணி.சமீபத்தில் சத்யராஜுடன் ஜோடி போட ஒரு வாய்ப்பு வந்ததாம். வெரி ஸாரி என்று ஸ்ட்ரைட்டாக கூறிதயாரிப்பாளரை அனுப்பி விட்டாராம் சினேகா. தெலுங்கில் திடீரென வந்த வாய்ப்புகளால் சந்தோஷமடைந்திருந்த சினேகா, அந்த வாய்ப்புகளை த்ரிஷா அலைவந்து பறித்துக் கொண்டதால் கடுப்பாகிப் போய் திரும்பவும் தமிழுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கமுடிவு செய்திருக்கிறாராம்.இந்த இரண்டு முக்கியமான முடிவுகளால் தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து குவியும் என்ற கணக்கில்இருக்கிறார் சினேகா. எப்படியோ, வாழ்ந்தால் சரி!
இனிமேல் மூத்தோர்களுடன் (மூத்த நடிகர்களுடன்) நடிக்கப் போவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தமுடிவை எடுத்திருக்கிறாராம் சினேகா.
தமிழ் சினிமாவில் இரண்டு வகை ஹீரோக்கள், பல வகையான ஹீரோயின்கள் உள்ளனர். ரொம்ப வருஷமாகநடித்துக் கொண்டிருக்கும் இளமையான ஹீரோக்கள் ஒரு வகை. சின்ன வயசு ஹீரோக்கள் இன்னொரு வகை.
மூத்த நடிகர்கள் வரிசையில் வரும் ரஜினி, கமல் ஆகியோருக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இருப்பதில்லை.ஆனால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், சரத்குமார் போன்ற இரண்டாம் கட்ட மூத்தவர்களுக்கு ஜோடிகிடைப்பது தான் பெரும் ராமாயணமாக இருக்கிறது.
கமல், ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் இந்தக் கால இளசுகளுக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் இருக்கவேசெய்கிறது, ஓரிரு குட்டீஸ்களைத் தவிர. ஆனால் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க குட்டிப் பாப்பாக்கள்ரொம்பவே பயப்படுகிறார்கள்.
மூத்த நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று ஜோதிகா, கோபிகா, மீரா ஜாஸ்மின், ஆசின் போன்ற பலநடிகைகள் சபதமே செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் இப்போது சினேகாவும் சேர்ந்துள்ளார்.
இதுவரை இவர் பெரிய நடிகர்களுடன் நடித்தது என்றால் அது கமல் மற்றும் அர்ஜூனுடன் மட்டும்தான்.பெரும்பாலும் சின்ன வயசு ஹீரோக்களுடன் தான் சினேகா நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிக்க வந்தவாய்ப்பைக் கூட இவர் நைசாக தவிர்த்து விட்டாராம்.
விதி விலக்காக சின்னா படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடிக்கப் போக, அதனால் அவரது தனிப்பட்டவாழ்க்கையில் பெரும் சுனாமியே வந்து போய் விட்டதாம். இதனால் இனிமேல் மூத்த நடிகர்களுடன் நடிக்கவேகூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் அம்மணி.
சமீபத்தில் சத்யராஜுடன் ஜோடி போட ஒரு வாய்ப்பு வந்ததாம். வெரி ஸாரி என்று ஸ்ட்ரைட்டாக கூறிதயாரிப்பாளரை அனுப்பி விட்டாராம் சினேகா.
தெலுங்கில் திடீரென வந்த வாய்ப்புகளால் சந்தோஷமடைந்திருந்த சினேகா, அந்த வாய்ப்புகளை த்ரிஷா அலைவந்து பறித்துக் கொண்டதால் கடுப்பாகிப் போய் திரும்பவும் தமிழுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கமுடிவு செய்திருக்கிறாராம்.
இந்த இரண்டு முக்கியமான முடிவுகளால் தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து குவியும் என்ற கணக்கில்இருக்கிறார் சினேகா.
எப்படியோ, வாழ்ந்தால் சரி!