திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல..சீரியல் நடிகையின் விவகாரமான முடிவு!
டெல்லி : ''தியா அவுர் பாத்தி ஹம்'' சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கனிஷ்கா சோனி, அனைவரும் வாய் பிளக்கும் அளவுக்கு ஒரு செயலை செய்துள்ளார்.
தியா அவுர் பாத்தி ஹம் எந்த சீரியலில் ரோலில் நடித்தவர் கனிஷ்கா சோனி , டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமே இவரின் எதார்த்தமான நடிப்பு தான்.
இந்த சீரியலில் கிடைத்த புகழின் மூலம் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு, சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

கனிஷ்கா சோனி
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கனிஷ்கா சோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் எந்த சீரியல் ஷூட்டிங் என்றும் இல்லை கல்யாணம் ஆகிவிட்டதா? மாப்பிள்ளை யார் என்றும் கேட்டு வந்தனர்.

திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல
ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள கனிஷ்கா சோனி, நான் சுயநினைவுடன் தான் இந்த முடிவை எடுத்தேன். திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல, அது அன்பு மற்றும் நேர்மை பற்றியது. இதனால் தான் நான் என்னையே திருமணம் செய்து கொண்டேன்.

தனியாக இருப்பதே மகிழ்ச்சி
நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும் தான். நான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நானே பதில் சொல்கிறேன் எனக்கு எந்த மனிதனும் தேவையில்லை . நான் எப்போதும் தனியாக இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் தெய்வம், வலிமை மற்றும் சக்தி வாய்ந்தவன், சிவன் மற்றும் சக்தி எல்லாம் எனக்குள் இருக்கிறது நன்றி என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இது புது கதையா இருக்கே
சீரியல் நடிகை தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டது குறித்து அவரும் பலரும் அவருக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய கலாசாரத்தை அவர் அவமதித்துவிட்டார் என்றும், ஒரு நல்ல ஆண்ணை இவர் வாழ்நாளில் இதுவரை சந்திக்கவில்லை என்றும், இதெபோல பெண்கள் எல்லாம் முடிவு எடுத்துவிட்டால் என்னடா ஆகும் என்றும் இது புது கதையா இருக்கே என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications