Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்:தன்னையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த தயாரிப்பாளர் கிஷனும், அவரது மனைவியும் அழைத்தார்கள் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அழைத்து அங்கு அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சில நடிகைகளிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ரெட்டி
கிஷனும், அவரது மனைவியும் என்னை கூட அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களுக்கு எடுபுடி வேலை பார்க்க ஹைதராபாத்தில் ஆள் உண்டு. அமெரிக்கா செல்லும் நடிகைகளுக்கு விசா உள்ளிட்ட அனைத்துக்கும் அவர்களே ஏற்பாடு செய்வார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
நடிகைகள்
நடிகைகளின் பிரபலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ரூ. 68 ஆயிரம் முதல் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் கொடுத்தார்கள். அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் விபரம் என்னிடம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
கிஷன் என்னை கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு அழைத்தார். ஆனால் அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வர முடியாது என்று நான் கூறியும் என் புகைப்படத்தை போஸ்டரில் வெளியிட்டிருக்கிறார் என்று நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனசுயா தெரிவித்துள்ளார்.
சஞ்சனா கல்ராணி
அமெரிக்காவில் ஒன்றும் புதிய விஷயம் நடந்துவிடவில்லை. படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் சி அல்லது டி கிரேட் நடிகைகளை தான் தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். டான்ஸ் ஆட அழைத்து பணத்தை காட்டி வலை விரிப்பார்கள் அல்லது நடிகைகளே விரும்பி செல்வார்கள் என்று கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
நடிகைகள்
அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளனர். இதனால் அமெரிக்கா செல்லும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்துகிறார்களாம்.