ஷகீலாவுக்கு மூன்று, புவனேஸ்வரிக்கு ஒன்று!

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியின் பிடியில் கட்டுண்டு போக வைத்திருந்தவர் ஷகீலா. இவரது படம் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு கிலி ஏற்படும். காரணம், இவரது படத்தின் வசூல் அவர்களின் வசூலை தாறுமாறாக சிதறடித்து விடும் என்பதால்.
இப்படியாக மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வந்த ஷகீலாவுக்கு ஒரு வழியாக அங்கிருந்து விஆர்எஸ் கொடுத்து அனுப்பி விட்டனர். மலையாளப் பட வாய்ப்புகள் மங்கிப் போனதாலும், தனது உடலுக்கு மவுசு குறைந்ததாலும் அங்கிருந்து தமிழுக்கு வந்தார் ஷகீலா.
கவர்ச்சி கலந்த காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானம் படங்களில் அதிகமாக இவரைக் காண முடிகிறது. இந்த நிலையில் இவரும் புவனேஸ்வரியும் இணைந்து பச்சை நிறமே ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்கின்றனராம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சாரம் செய்ததாக கைதாகி சிறைக்குப் போய் பின்னர் திரும்பி வந்தவர் புவனேஸ்வரி. வந்த பின்னர் அவர் தெலுங்குக்கு ஷிப்ட் ஆகி அங்கு நடித்து வந்தார். தற்போது பச்சை நிறமே ரோஜாக்கள் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பன்ச் லைனாக காதல் நெருப்பு பத்திக்கிச்சு என்று வைத்துள்ளனர்.
ஷகீலாவும், புவனேஸ்வரியும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் பலான காட்சிகளும் நிறையவே உள்ளதாம். இருப்பினும் ஷகீலாவுக்குத்தான் திறமை காட்ட நிறைய வாய்ப்பாம். புவனேஸ்வரிக்கும் திருப்திகரமான முறையில் வைத்துள்ளனராம்- அவரது ரசிகர்களின் திருப்தியை ஏமாற்றாமல். ஒரு காட்சியில் புவனேஸ்வரியை தாராளமாக காட்டியுள்ள இயக்குநர், ஷகீலாவுக்கு அதேபோல மூன்று காட்சிகளை வைத்துள்ளாராம்.
படத்தைப் பார்த்து சென்சார் போர்டு என்ன சொல்லப் போகிறதோ, என்ன செய்யப் போகிறதா, 'எப்படி' வெட்டப் போகிறதோ?


Click it and Unblock the Notifications











