Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!
தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி.
அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது.
அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து திரைக்கதை தயார் செய்திருக்கிறாராம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்ற பெயரில், பாலியல் சமாச்சாரங்களையே பிரதானமாக இந்தக் கதையில் எடுக்கப் போகிறாராம்.
"இன்றைக்கு பெண்களுக்கு எதிராக அதிகம் நடப்பது செக்ஸ் வன்முறைகள்தான். அதனால் அத்தகைய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறேன். இப்படிப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு பெண்தான் இந்தப் படத்தின் நாயகி," என்று அவர் ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார்.
மேலும், "சினிமா நடிகை ஆன பிறகுதான், படம் இயக்குவதில் ஆர்வம் பெருகிறது. என் நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறிவிட்டது," என்றார்.