Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனை: அர்ஜுன் ரெட்டி ஹீரோயின்
Recommended Video
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனையாக இருந்தது என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடிகையானார்.
அவர் நடித்த முதல் படமான அர்ஜுன் ரெட்டியே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் சினிமா, குடும்பம் குறித்து அவர் கூறியதாவது,
எதிர்ப்பு
சினிமாவில் நடிக்கக் கூடாது என்று அப்பா கூறினார். ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேருமாறு வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் எனக்கு படித்த படிப்புக்கு வேலை செய்வதை விட படங்களில் நடிக்கவே விருப்பமாக இருந்தது.
மும்பை
பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு மும்பைக்கு கிளம்பி வந்தேன். போ போ போய் தெருவில் பிச்சை எடுக்கப் போகிறாய் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.
ஆண்கள்
மும்பையில் இரண்டு ஆண்கள் தங்கியிருந்த வீட்டில் நானும், ஒரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள். ஒரு நாளும் என்னை தவறான நோக்கத்தோடு பார்த்தது இல்லை.
அர்ஜுன் ரெட்டி
அர்ஜுன் ரெட்டி படம் ஹிட்டானதும் என் குடும்பத்தார் என்னை ஏற்றுக் கொண்டனர். கல்லூரியில் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதலில் தோல்வி அடைந்தேன்.
நரக வேதனை
காதல் தோல்வியால் கஷ்டப்பட்டபோது தான் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தேன். விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது என் காதல் நினைவுக்கு வந்து நரக வேதனையாக இருந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நடித்தேன் என்கிறார் ஷாலினி பாண்டே.