பாட்மிண்டனில் கலக்கிய ஷாலினி!

விளையாட்டில் கவனம் செலுத்தும் ஷாலினி, பாட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் வெற்றியைப் பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் ஷாலினி - பிரகாஷ் ஜோடி வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும் சூர்ய பிரகாஷ் - ரேஷ்மா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தப் போட்டியில் கடந்த இரண்டு வருடங்களாக ஷாலினி கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டன் தவிர, நீச்சலிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications