Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரளாவில் சோலார் பேனல் கருவி அமைத்துத் தருவதாக மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில், தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதாநாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த ஊழலில், கேரள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உதவியாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு வக்கீல், 'திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராசிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிஜு ராதாகிருஷ்ணன் மோசடி செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.46 லட்சத்தை ஷாலுமேனன் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். வக்கீலின் வாதத்தைத் தொடர்ந்து நடிகை ஷாலு மேனன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.