Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரளாவில் சோலார் பேனல் கருவி அமைத்துத் தருவதாக மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில், தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதாநாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த ஊழலில், கேரள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உதவியாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு வக்கீல், 'திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராசிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிஜு ராதாகிருஷ்ணன் மோசடி செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.46 லட்சத்தை ஷாலுமேனன் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். வக்கீலின் வாதத்தைத் தொடர்ந்து நடிகை ஷாலு மேனன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.