Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கேரளா சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலுமேனன் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரளாவில் சோலார் பேனல் கருவி அமைத்துத் தருவதாக மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில், தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதாநாயர், கேரள டி.வி. நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த ஊழலில், கேரள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உதவியாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு வக்கீல், 'திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராசிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிஜு ராதாகிருஷ்ணன் மோசடி செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.46 லட்சத்தை ஷாலுமேனன் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். வக்கீலின் வாதத்தைத் தொடர்ந்து நடிகை ஷாலு மேனன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.