Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்!
அந்த புகாரில், "மாத்தியோசி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தபோதே படத்தில் நான்தான் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். வேறு ஒருவரை பேச வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தேன். அதற்கு தயாரிப்பாளர் சேகர் ரெட்டியும், டைரக்டர் நந்தா பெரியசாமியும் ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்தபின், என்னை டப்பிங் பேச கூப்பிடவே இல்லை. வேறு ஒருவரை வைத்து எனக்கு டப்பிங் பேசவைத்தார்கள்.
இதுபற்றி நான் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன். நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கையின் பேரில், மாத்தியோசி படத்தின் டப்பிங் வேலைகள் நிறுத்தப்பட்டன. ஷம்முதான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், என்னை டப்பிங் பேசவைத்தார்கள்.
ஆனால், படத்தில் என் குரல் இல்லை. எனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேசவைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று குறிப்பிட்டுள்ளார்.