Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்!
அந்த புகாரில், "மாத்தியோசி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தபோதே படத்தில் நான்தான் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். வேறு ஒருவரை பேச வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தேன். அதற்கு தயாரிப்பாளர் சேகர் ரெட்டியும், டைரக்டர் நந்தா பெரியசாமியும் ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்தபின், என்னை டப்பிங் பேச கூப்பிடவே இல்லை. வேறு ஒருவரை வைத்து எனக்கு டப்பிங் பேசவைத்தார்கள்.
இதுபற்றி நான் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன். நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கையின் பேரில், மாத்தியோசி படத்தின் டப்பிங் வேலைகள் நிறுத்தப்பட்டன. ஷம்முதான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், என்னை டப்பிங் பேசவைத்தார்கள்.
ஆனால், படத்தில் என் குரல் இல்லை. எனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேசவைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று குறிப்பிட்டுள்ளார்.